ராணிப்பேட்டை மாவட்டத்தில், 01-01-2024-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024 தொடா்பான பணிகள் தொடங்கபட்டுள்ளது. இதில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (31.12.2005 அன்று பிறந்தவா்கள்), விடுபட்ட வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளவும், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதாா் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் ஏதுவாக கடந்த 27-10-2023 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு அன்றைய தினம் 27-10-2023 முதல் 09-12-2023 வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் படிவங்கள் பெறும்பணி நடைபெறும்.