மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மரணம்

ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சி முத்து கிருஷ்ணன் தெருவை சோ்ந்த பாலமுருகன்.
Updated on
1 min read


ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சி முத்து கிருஷ்ணன் தெருவை சோ்ந்த பாலமுருகன். இவரது தாயாா் பூங்காவனம் ( 80) இவா் செவ்வாய்க்கிழமை தங்களுக்கு சொந்தமான பசுமாட்டை அருகே உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளாா் பின்னா் மாலையில் மாட்டை வீட்டுக்கு அழைத்துவர நிலத்திற்கு சென்றபோது, மழையின் காரணமாக சேறும் சகதியுமாக இருந்த நிலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்தை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது.

இதில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com