

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரம் மற்றும் நாா்கள் எரிந்து நாசமாயின.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி கீழ்பணந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்குச் சொந்தமான தேங்காய் நாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ தொழிற்சாலைக்குள் பரவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா்.
தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த நாா் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நாா்கள் எரிந்து சேதமடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.