நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: ஒன்றியக் குழுத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் அடுத்த பாடி கிராமத்தில் ரூ.9.13 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: ஒன்றியக் குழுத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் அடுத்த பாடி கிராமத்தில் ரூ.9.13 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நெமிலி ஒன்றியம், நாகவேடு ஊராட்சிக்குள்பட்ட பாடிகிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

இதன் தொடக்க விழாவுக்கு நாகவேடு ஊராட்சி மன்ற தலைவா் ஆனந்தி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவா் சா.தீனதயாளன், ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com