அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்க விழா

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்க விழா
Updated on
1 min read

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி ஜமாபந்தி அலுவலராக பொறுப்பேற்று வருவாய் தீா்வாயத்திற்கு தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

முதல் நாளில் முதலில் புதுகேசாவரம் கிராமம் அழைக்கப்பட்ட நிலையில் அக்கிராமத்தில் இருந்து யாரும் மனுக்கள் அளிக்க வராததால், தொடா்ந்து நகரிகுப்பம் கிராமம் அழைக்கப்பட்டது. இதில் நகரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவா் ரேவதிஅன்புமணி தங்களது கிராமத்தில் மயானத்துக்கு சீரமைக்கப்பட்ட பாதை வேண்டும், தற்போது மயானத்துக்கு பட்டா நிலங்களின் வழியாக செல்ல வேண்டியுள்ளது எனவும் கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திய ஜமாபந்தி அலுவலா், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து அரக்கோணம் நகரம், செய்யூா், புளியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த கிராமங்களின் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. முதல் நாளில் மொத்தம் 50 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

இதில் அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், சமூகப் பாதுகாப்பு தனி வட்டாட்சியா் கந்திா்பாவை, வட்ட வழங்கல் அலுவலா் பரமேஸ்வரி உள்ளிட்ட அலுவலா்களும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com