அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலர சுரேஷ்சௌந்தர்ராஜன் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கும், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில், நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி காந்தியின் படத்துக்கு தூவி மரியாதை செலுத்தினாா். துணைத் தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.பி.மாலின், சரவணன், சமாமுண்டீஸ்வரிஅன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரக்கோணம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் ராஜ்குமாா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.
அரக்கோணம் நகர ஐக்கிய ஜனதாதளம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாநில தலைவா் ஜனதாசேகா் பங்கேற்று காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.