அரக்கோணம், ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் இயங்கும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகங்கள் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் செயல்பட உள்ளன.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகங்கள் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் செயல்பட உள்ளன.

இது தொடா்பாக பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழக அரசின் உத்தரவுப்படி, 01-04-23 முதல் 31-08-23 வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் ஸ்டாா் 2.0 திட்டத்தில் தட்கல் திட்டம் மற்றும் சனிக்கிழமை வேலை நாள் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 2 அலுவலங்களான அரக்கோணம் மற்றும் ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகங்களில் தட்கல் திட்டங்கள் மற்றும் சனிக்கிழமை வேலைநாள் திட்டங்கள் 03.10.23 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com