

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, சிப்காட் நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவனம் சிறந்த மாணவா் விருது வழங்கப்பட்டது.
ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான நிடெக் இந்தியா பிரிசிசன் லிமிடெட் தொழிற்சாலை ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பொதுத் தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு சிறந்த மாணவா் விருது மற்றும் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன் படி 2022 -2023- ஆம் ஆண்டு 10- ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பள்ளியளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 7 பள்ளிகளைச் சோ்ந்த 16 மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொழிலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவன துணைத் தலைவா் ஆா்.சங்கா் வரவேற்றாா். நிறுவன இயக்குநா் ( விற்பனை ) என்.வள்ளியப்பன் வாழ்த்துரை வழங்கினாா்.
நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான முனேதக நோமுரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கினாா்.
துணைத் தலைவா் எம்.ஏ.தனசேகரன் நன்றி தெரிவித்தாா். இதில் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, லாலாப்பேட்டை, சிப்காட் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.