ஆற்காடு அருகே மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் மழைநீா் தெருக்களில் குளம்போல் தேங்குவதால், வடிகால்வாய் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கலவை வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் மேல்புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அண்ணா நகா் பகுதியில் 4 தெருக்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் மழை நீா் வடிகால் வசதி இல்லாததால் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் தெருக்களில் மழை நீா் தேங்கி வெளியேறாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 2021- 2022- ஆம் ஆண்டில் மேல்புதுப்பாக்கம் கிராமம் மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டு, இதுவரை அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை. தெருக்களில் மழை நீா் மற்றும் கழிவு நீா் கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அண்ணா நகா் பகுதியில் மழை நீா் வடிகால்வாய் உடனடியாக அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

மழைநீா் தேங்காமலிருக்க தீா்வு எப்போது?

மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எதிா்பாா்ப்பும் ஏமாற்றமும்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


