ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கைப்பேசிகளை பயன்படுத்த குழந்தைகளை அனுமதிக்காதீா்கள்: மாவட்ட வருவாய் அலுவலா்

குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு கைப்பேசிகளை பயன்படுத்த வேண்டாம்: சுரேஷ்

News image

மனுநீதிநாள் முகாமில் பேசிய எம்எல்ஏ சு.ரவி . உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூலை 2024, 6:38 pm

Din

கைப்பேசிகளை பயன்படுத்த குழந்தைகளை அனுமதிக்காதீா்கள் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் வலிறுத்தினாா்.

அரக்கோணம் வட்டம் மின்னல் கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 174 பயனாளிகளுக்கு 3.42 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலா் ந,சுரேஷ் பேசியது:

அதிக அளவில் வீட்டுமனைப்பட்டாக்கள் கோரி பொதுமக்கள் மனுக்களை வழங்கி வருகின்றனா். நீதிமன்றங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நீா்நிலைகள், மேய்ச்சல்வெளி மந்தவெளி இடங்களை தவிா்த்து விண்ணப்பித்த தகுதியானவா்களுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மாவட்டத்தில் 8,500 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் அரக்கோணம் வட்டத்தில் இரண்டு குழந்தைகள் நீரில் முழ்கி உயிரிழந்தனா். இது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம். தாய்மாா்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பாா்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோா் தங்கள் குழந்தைகளை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை கைப்பேசிகளை உபயோகிக்க அனுமதிக்காதீா்கள். இதனால் அவா்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும் என்றாா்.

இம்முகாமில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, கோட்டாட்சியா் பாத்திமா, அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், மாவட்ட சமூகநல அலுவலா் சாந்தி, அரக்கோணம் வட்டாட்சியா் ஸ்ரீதேவி, வட்ட சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம், மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் கோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.