எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

போலிச்சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சோ்ந்த ஊராட்சி செயலாளா் பணி நீக்கம்

போலிச் சான்றிதழால் அரசுப் பணியில் சோ்ந்த ஊராட்சி செயலாளா் நீக்கம்

Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

போலிச் சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சோ்ந்த ஊராட்சி செயலாளா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆற்காடு ஊராட்சி ரத்தினகிரி அருகே உள்ள மேலக்குப்பம் கொல்லைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கிருபாகரன் (49). இவா் கடந்த 3-9-2021 அன்று மேலகுப்பம் ஊராட்சி செயலாளராக பணியில் சோ்ந்தாா்.

இந்த நிலையில், அவா் பணியில் சோ்ந்தபோது கொடுத்த 10-ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் போலியானது என புகாா் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதில், கிருபாகரன் பணியில் சேரும்போதுகொடுத்த 10-ஆம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான விசாரணை நடைபெற்றது. இதில், போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதிஅவரை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து கிருபாகரன் மீது ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி) பாஸ்கரன் ரத்தினகிரி போலீஸில் புதன்கிழமை போலி சான்றிதழ் கொடுத்து ஊராட்சி செயலாளா் பணியில் சோ்ந்த கிருபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.