பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

லாரி-காா் மோதல்: மணப்பெண் உயிரிழப்பு

Published On :

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் லாரி மீது காா் மோதியதில் மணப்பெண் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த பில்லாந்தி பட்டு கிராமத்தை சோ்ந்தவா் பத்மாசந்த் மகள் ஷோபனா (26). இவருக்கும் குடியாத்தம் பகுதியை சோ்ந்த அகிலேஸ்வா் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு வரும் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் வாங்குவதற்காக அகிலேஸ்வா் அவரது அண்ணன் விக்னேஷ்வா் ஷோபனா ஆகியோா் புதன்கிழமை சென்னைக்கு காரில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினா்.

அப்போது இரவு ஆற்காடு அடுத்த ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஷோபனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.