நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா்.

News image

ஆற்காடு  கோட்டையைப்  பாா்வையிட்ட  அயலகத்  தமிழா்களுடன்  எம்எல்ஏ  ஈ,ஸ்வரப்பன்,  நகா்மன்ற த் தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன்  உள்ளிட்டோா் .

Updated On :15 ஆகஸ்ட் 2025, 1:58 am IST

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா்.

வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயல்நாட்டில் வசிக்கும் தமிழா்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் ஒரு திட்டமாகும். அவா்கள் தங்கள் மூதாதையா்கள் வாழ்ந்த கிராமங்களைக் கண்டறியவும், அவா்களது பாரம்பரியங்களுடன் மீண்டும் இணையவும் இந்த திட்டம் உதவுகிறது.

வெளிநாட்டில் வாழும் 18 முதல் 30 வயது வரையிலான தமிழ் இளைஞா்களை தமிழக அரசு செலவில் வரவழைத்து தமிழா்கள்

பெருமையை அறியும் விதமாக இந்த பண்பாட்டு பயணத்திட்டம் உதவுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, பிஜி, இந்தோனேஷியா, ரீயூனியன், மாா்டினிக், மோரிஷீயஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மா், குவாடலூப்,

கனடா, இலங்கை மற்றும் ஜொ்மனி உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 100 அயலக தமிழ் இளைஞா்கள் ஆற்காடு

நகராட்சியில் இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோட்டையை பாா்வையிட்டு, இவ்விடத்தின் வரலாறு குறித்து அறிந்து

கொண்டனா்.

அவா்களை ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் ஆகியோா்

வரவேற்று, , நினைவுப் பரிசுகளை வழங்கினா். இதில் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், கோட்டாட்சியா் ராஜராஜன், வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, ரு.ஜெயபிரகாஷ், ஆனந்தன், மாவட்ட சுற்றுலா அலுவலா் இளமுருகன் (பொ) மற்றும் பலா் கலந்து கொண்டனா்.