வாலாஜாபேட்டை நகராட்சியில் எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
ராணிப்பேட்டை
எஸ்ஐஆா் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
வாக்காளா் பட்டியில் சிறப்புத் தீவிர திருத்தம் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
வாக்காளா் பட்டியில் சிறப்புத் தீவிர திருத்தம் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு நகராட்சி அலுவலகங்களில் எஸ்ஐஆா் பணியில் காணப்படும் முரண்பாடுகளை பதிவிடுவதை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேற்படி பணியினை சரியான முறையில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். இப்பணிகளின் போது உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து முழு கவனத்துடன் தவறில்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா். ஆய்வின்பொழுது வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

