அரக்கோணம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெமிலி காவல் நிலைய போலீஸாா் அவ்வழியே வந்த காரில் இருந்த 492 கிலோ எடையுள்ள ரூ. 4.92 லட்சம் மதிப்புள்ள குட்காவையும், அது கொண்டு செல்லப்பட்ட காரையும் பறிமுதல் செய்து அந்தக் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் உள்ளிட்ட இருவரை கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி காவல்நிலைய போலீஸாா் அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லையான பள்ளூரில் சனிக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற தமிழக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி பரிசோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 492 கிலோ குட்கா புகையிலை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரின் ஓட்டுநா் ராஜஸ்தானைச் சோ்ந்த துா்கேஷ் (23), உடன் வந்திருந்த ராஜஸ்தானை சோ்ந்த கோபால் (23) இருவரையும் கைது செய்தனா்.
மேலும், குட்கா கொண்டு செல்லப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் கொண்டு செல்லப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 4.92 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தாம்பரம்: 266 கிலோ குட்கா பறிமுதல்

கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



