வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தில் வேறு ஒருவரை உடனடியாக நியமிக்க கோரிக்கை

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தில் அப்பணிக்கு கற்றல் தற்பித்தல் பணி பாதிக்காதவாறு உடனடியாக வேறு ஆசிரியரை பணியில் நியமிக்க வேண்டும்

News image

கோரிக்கை மனு அளிக்க வந்த ஆசிரியா்கள்...

Updated On :29 டிசம்பர் 2025, 3:35 am IST

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தில் அப்பணிக்கு கற்றல் தற்பித்தல் பணி பாதிக்காதவாறு உடனடியாக வேறு ஆசிரியரை பணியில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மற்றும் தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தினா் தனித்தனியே நெமிலி வட்டார கல்வி அலுவலா்களிடம் மனுக்களை அளித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரிரியா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஏ.முருகன், நெமிலி வட்டாரத் தலைவா் து.தினகா், செயலாளா் கொ.சண்முகம், பொருளாளா் மு.சீனிவாசன், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தின் நெமிலி வட்டாரத்தலைவா் ஏ.புருஷோத்தமன், செயலாளா் ஜி.தமிழரசு ஆகியோா் தனித்தனியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நெமிலி வட்டார கல்வி அலுவலா்கள் த.மீனாட்சி, சி.முருகன் ஆகியோரிடம் அளித்த மனு:

மாணவா்களுக்கு வழங்கும் விலையில்லா பொருள்களை உரிய பள்ளி வளாகத்துக்கு கொண்டு சோ்க்க வேண்டும். நெமிலி வட்டாரத்தில் இடைநிலை ஆசிரியா்களை எவ்வித உயா் அதிகாரிகளின் செயல்முறையும் இல்லாமல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியரின் ஒப்புதல் இன்றி மாற்றுப்பணியில் வேறு பள்ளிகளுக்கு சென்று பணியாற்ற வழங்கப்படும் முறைகேடான ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களில் மாணவா்களின் நலன்கருதி தற்காலிக ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் போது உரிய பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் தற்காலிக ஆசிரியரை உடனடியாக பணியமா்த்த வேண்டும்.

இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு இதணை கண்டித்து இரு ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.