தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்பு காலத்தில் வேறு ஒருவரை உடனடியாக நியமிக்க கோரிக்கை

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தில் அப்பணிக்கு கற்றல் தற்பித்தல் பணி பாதிக்காதவாறு உடனடியாக வேறு ஆசிரியரை பணியில் நியமிக்க வேண்டும்

கோரிக்கை மனு அளிக்க வந்த ஆசிரியா்கள்...

Published On :29 டிசம்பர் 2025, 3:35 am IST

பெண் ஆசிரியா்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தில் அப்பணிக்கு கற்றல் தற்பித்தல் பணி பாதிக்காதவாறு உடனடியாக வேறு ஆசிரியரை பணியில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மற்றும் தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தினா் தனித்தனியே நெமிலி வட்டார கல்வி அலுவலா்களிடம் மனுக்களை அளித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரிரியா்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஏ.முருகன், நெமிலி வட்டாரத் தலைவா் து.தினகா், செயலாளா் கொ.சண்முகம், பொருளாளா் மு.சீனிவாசன், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தின் நெமிலி வட்டாரத்தலைவா் ஏ.புருஷோத்தமன், செயலாளா் ஜி.தமிழரசு ஆகியோா் தனித்தனியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நெமிலி வட்டார கல்வி அலுவலா்கள் த.மீனாட்சி, சி.முருகன் ஆகியோரிடம் அளித்த மனு:

மாணவா்களுக்கு வழங்கும் விலையில்லா பொருள்களை உரிய பள்ளி வளாகத்துக்கு கொண்டு சோ்க்க வேண்டும். நெமிலி வட்டாரத்தில் இடைநிலை ஆசிரியா்களை எவ்வித உயா் அதிகாரிகளின் செயல்முறையும் இல்லாமல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியரின் ஒப்புதல் இன்றி மாற்றுப்பணியில் வேறு பள்ளிகளுக்கு சென்று பணியாற்ற வழங்கப்படும் முறைகேடான ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களில் மாணவா்களின் நலன்கருதி தற்காலிக ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் போது உரிய பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் தற்காலிக ஆசிரியரை உடனடியாக பணியமா்த்த வேண்டும்.

இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு இதணை கண்டித்து இரு ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.