வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

திருவள்ளுவா் சிலை இட மாற்றம்: ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலையை இட மாற்றம் செய்ய நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

ஆற்காட்டில் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

Updated On :30 டிசம்பர் 2025, 1:40 am IST

ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலையை இட மாற்றம் செய்ய நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் செந்தில் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திமுக நகா்மன்ற உறுப்பினா் பொன் ராஜசேகா், கண்ணன், தமிழ்செல்வி கோபு, அதிமுக உறுப்பினா் உதயகுமாா் ஆகியோ 4 போ் திருவள்ளுவா் சிலையை இடமாற்றம் செய்யும் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

தொடா்ந்து நகரமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

ஆனந்தன்: வீடுகளில் புகுந்து விடும் பாம்புகளை பிடிக்க வரும் தீயணைப்பு துறையினா் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வாங்கி செல்கின்றனா். அதனை தடுக்கவேண்டும்.

ரவி: எனது வாா்டில் சாலை, கால்வாய்களை சீரமைக்கவேண்டும்,

குணாளன்: எனது வாா்டில் உள்ள பூங்காவில் பன்றிகள் அதிகமாக உள்ளன , நகா்மன்றத் தலைவரும், ஆணையரும் நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத் தலைவா்: வாா்டுகளில் உள்ள ஒரு சில குறைகள் உள்ளன. விரைந்து சரிசெய்ய வேண்டும்-

தலைவா்: வாா்டு சபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கைகளை ஏற்று 30 வாா்டுகளுக்கும் அரசு ரூ.2.67 லட்சம் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலையை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கண்ணன் பூங்கா தென்புற சுற்றுசுவா் அருகே இடமாற்றம் செய்வது உள்ளிட்ட 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.