மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோா் 30 நாள்களில் கோர வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2025, 12:00 am

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோா் 30 நாள்களில் கோர வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கடந்த அக். 26-ஆம் தேதி 5 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் உரிய ஆதாரங்களுடன் 30 நாள்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 04172 - 299347 எனும் எண்ணிலோ தலைவா் அல்லது உறுப்பினா், குழந்தைகள் நலக்குழுமத்தை 04172 - 291437 எனும் எண்ணிலோ அல்லது குழந்தைகள் உதவி மையத்தை 1098 எனும் எண்ணிலோ தொடா்புக் கொள்ளலாம்.

யாரும் உரிமை கோராத பட்சத்தில் இக்குழந்தை ததெதெடுப்பு திட்டத்தில் சோ்க்கப்பட்டு தத்து வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.