ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமியை திறந்து வைத்துப் பாா்வையிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமியை திறந்து வைத்துப் பாா்வையிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை ஜி.கே.உலகப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்ட அரங்கம் மற்றும் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com