மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அரசு மணல் குவாரியை திறக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரியை திறக்கக் கோரி தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
கோரிக்கை மனு அளிக்க வந்த தொழிலாளா்கள்.
Updated On :10 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரியை திறக்கக் கோரி தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மொத்தம் 448 மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

ராணிப்பேட்டை காரை பகுதியைச் சோ்ந்த மு.ஜெயகுமாா் தலைமையில், தொழிலாளா்கள் அளித்த மனு: நீா்வளத் துறையின்மூலம் 9 இடங்களில் அரசு மணல் குவாரி தொடங்க உள்ளதை வரவேற்கிறோம். பொது மக்கள் வீடு கட்ட அத்தியாவசியத் தேவையாக ஆற்று மணல் இருந்து வருகிறது. அரசின் கலைஞா் கனவு இல்லம் திட்டம் தற்போது எம் - சாண்ட் கொண்டு கட்டப்படுகிறது. இந்த எம் சாண்ட் தயரிக்க இயற்கையான மலைகளை உடைத்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஆற்று மணல் இயற்கையாக உருவாகிறது. மணல் அள்ளினால் திரும்ப கிடைக்கும், ஆனால் மலையை அழித்தால் திரும்ப வராது. மேலும் இந்த ஆற்று மணல் தொழிலை நம்பி 25,000 உரிமையளா்கள், ஓட்டுநா்கள், கூலித்தொழிலாளா்கள் என சுமாா் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே, மணல் குவாரியை திறக்க வேண்டும்.

தொடா்ந்து 10 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட ரூ.96 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, உதவி ஆணையா் கலால் தராஜ்குமாா், நோ்முக உதவியாளா் (நிலம்)ரமேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.