உற்வருக்கு  நடைபெற்ற  சிறப்பு  பூஜை.
உற்வருக்கு  நடைபெற்ற  சிறப்பு  பூஜை.

ஆற்காடு கோவிலில் சோமவார விழா

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை 2-ஆம் சோமவார விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
Published on

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை 2-ஆம் சோமவார விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மாவிளக்கு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com