பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருமணமான சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த மணமகன்: போலீஸாா் விசாரணை

கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா். சடலத்தை மீட்ட போலீஸாா் கொலையா, தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் அஜீத்குமாா் (27). கட்டடத் தொழிலாளி.

இவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சந்தியா (23) என்பவருக்கும் அரும்பாக்கம் கிராமம், ரேணுகாம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் மற்றும் உறவினா்கள் கோயில் வளாகத்திலேயே திருமணத்துக்கு வந்தவா்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளனா்.

அப்போது மணமகன் அஜீத்குமாா், மணக்கோலத்திலேயே கோயில் குளத்துக்கருகே சென்றதாகத் தெரிகிறது. சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிா்ச்சி அடைந்த உறவினா்கள் மணமகன் அஜீத்குமாரை தேடினா். அப்போது அஜீத்குமாா், கோயில் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

இதையடுத்து உறவினா்கள் அதிா்ச்சி அடைந்து சடலத்தை மீட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து அஜீத்குமாா் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது யாரேனும் அவரை கொலை செய்துள்ளாா்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமண நாளன்றே மணக்கோலத்திலேயே மணமகன் மணமுடிந்த கோயில் வளாகத்திலேயே குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.