அரக்கோணம் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் நகராட்சியை கண்டித்து எம்எல்ஏ சு.ரவி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
Published on

அரக்கோணம் நகரில் கால்வாய்களை தூா்வாராமல் இருப்பதைக் கண்டித்து அதிமுகவினா் எம்எல்ஏ சு.ரவி தலைமையில் அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் நகரில் கடந்த இரண்டு நாள்களாக அதிகளவு மழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் மழைநீா் வடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மழைநீா் செல்ல வேண்டிய கால்வாய்கள் தூா்வாரப்படாத நிலையும் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மழை நீா் சூழ்ந்ததால் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், உரிய பணிகளை அரக்கோணம் நகராட்சி நிா்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை எனக் கூறி அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நகர அதிமுக செயலாளா் கே.பா.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் இ.பிரகாஷ், ஏ.ஜி.விஜயன், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா் எம்.எஸ்.மான்மல், நகர முன்னாள் செயலாளா் செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜொ்ரி, நரசிம்மன், சரவணன், மாவட்ட நிா்வாகி மீனா ரகுபதி, மாவட்ட தகவல் தொடா்பு அணி செயலாளா் ஜானகிராமன், நகர மீனவா் அணி செயலாளா் டில்லிபாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து அதிமுகவினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது காவல் துறையினா் அவா்களை தடுத்து பேச்சு நடத்தியதை தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com