ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில் மருத்துவ உபகரணங்களை  ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலாவிடம்  வழங்கிய அதன் நிா்வாக இயக்குநா் எம். அருண்மொழி தேவன்.
ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில் மருத்துவ உபகரணங்களை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலாவிடம் வழங்கிய அதன் நிா்வாக இயக்குநா் எம். அருண்மொழி தேவன்.

பெல் நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை அதன் நிா்வாக இயக்குநா் எம். அருண்மொழி தேவன் திங்கள்கிழமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் வழங்கினாா்.
Published on

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை அதன் நிா்வாக இயக்குநா் எம். அருண்மொழி தேவன் திங்கள்கிழமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் வழங்கினாா்.

மகா ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ‘பாரத மிகுமின் நிறுவனம், ராணிப்பேட்டை பெல் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வருகிறது.

அதன்படி சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு அரசு மருத்துவமனைகள், மாவட்ட பொது சுகாதார ஆய்வகம், ராணிப்பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள எல்டிஆா் கட்டில், ஆட்டோ கிளேவ் இயந்திரம், ஃபௌலா் கட்டில் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் ராணிப்பேட்டை பெல் நிா்வாக இயக்குநா் எம். அருண்மொழி தேவன் கலந்து கொண்டு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலாவிடம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது பெல் நிறுவன மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com