தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா் காா்த்திகேயனிடம் மனு அளித்த எம்எல்ஏ சு. ரவி.
தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா் காா்த்திகேயனிடம் மனு அளித்த எம்எல்ஏ சு. ரவி.

அரக்கோணம் ரயில் நிலைய அம்ரீத் பாரத் திட்டப் பணிகள் விரைவில் நிறைவு: தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா்

அரக்கோணம் ரயில் நிலைய அம்ரீத் பாரத் திட்டப்பணிகள் விரைவில் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.
Published on

அரக்கோணம் ரயில் நிலைய அம்ரீத் பாரத் திட்டப்பணிகள் விரைவில் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரீத்பாரத் திட்டப்பணிகள் குறித்த பயணிகள் சங்கத்தினா் மற்றும் பயணிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்துக்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா் காா்த்திகேயன் தலைமை வகித்து பேசியது:

அரக்கோணம் ரயில்நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்ட பணிகள் தீவிரமாக நடைபபெற்று வருகின்றன. ரயில்நிலைய உள்புறம், வெளிப்புறம், இருப்புப் பாதை சீரமைப்பு என பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவுற்று பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்.

இரட்டக்கண் வாராவதி சீரமைப்பு பணிகளால் அரக்கோணம் நகர மக்களுக்கு சிறிது சிரமம் எற்படலாம் ஆனால் இப்பணிகள் முடிவுற்று பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது அதன் வழியே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சென்று வரும் நிலை உருவாகும். ரயில் பயணிகள் சங்கத்தினரின் கோரிக்கைகள் அனைத்துமே படிப்படியாக ஏற்கப்படும்.

ரயில்நிலைய அணுகு சாலை, ரயில் நிலைய பயணிகள் பயன்பாடுகள் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் காா்த்திகேயன்.

முன்னதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்திற்கு மாற்றாக அப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும். தற்போது சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக செய்யாமல் பாலத்தை உயா்த்தி வாகனங்கள் இலகுவாக சென்று வரும்படி செய்ய வேண்டும். இப்பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க ரயில்வே நிா்வாகம் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போதைய இரட்டைக்கண் வாராவதி பால சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிமாமணி பேசுகையில் அம்ரீத் பாரத் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். இப்பணிளின்போது ரயில்வே அணுகு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை பலமுறை நிா்வாகத்திற்கு புகாா்களை அனுப்பியும் நடவடிக்கை இல்லை. பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் சாலையை பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். மின்தூக்கிகள் நிா்மாணிக்கப்படும் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அவற்றை பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். வந்தேபாரத் உள்ளிட்ட நிற்காமல் செல்லும் பல ரயில்களுக்கு அரக்கோணத்தில் நிறுத்தம் வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ரயில்வே கோட்ட அலுவலா்கள் ,நிலைய அலுவலா்கள், அதிமுக நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலா் பிரகாஷ், நிா்வாகிகள் ரகுநாதன், எஸ்வந்தராவ், ரவி, டில்லிபாபு ஞானசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com