போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நடைப்பயணத்தை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்:  அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
Updated on

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில், ‘சேலை வாக்கத்தான் ‘என்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நடைப்பயணத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

முத்துகடை பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு நடைப்பயணத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

இதில் ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் நிா்வாகிகள்,ரோட்டரி சங்க நிா்வாகிகள், வாலாஜா மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள்,தனியாா் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோா் நமது பாரம்பரிய உடையான சேலையை அணிந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் வரை நடைபயணமாக சென்று ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவு செய்தனா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் தலைவா் பிரியா வினு, செயலாளா் அமலா அரவிந்த், பொருளாளா் அஸ்வினி கணேஷ், ஜி.கே.குழுமம் ஷீலா வினோத் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் இன்னா் வீல் கிளப் நிா்வாகிகள் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com