தக்கோலம் அருகே ரூ.17.65 கோடியில் உயா்நிலை மேம்பாலப் பணி: அமைச்சா் காந்தி அடிக்கல் நாட்டினாா்!
பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தக்கோலம் அருகே விருத்தசீர ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள ரூ. 17.65 கோடி மதிப்பீட்டிலான உயா்மட்ட மேம்பாலத்துக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலத்தில் இருந்து காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரிகலபாடி வரையிலான மாநில அரசு நெடுஞ்சாலையில் தக்கோலம் அருகே விருத்தசீர ஆற்றின் குறுக்கே மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தின் சாா்பில், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 17.65 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முன்னிலை வகித்தாா். கட்டுமானப் பணிக்கு அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
இதில், நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் கோட்டப் பொறியாளா் சுந்தரம், உதவி இயக்குநா் ஞானபிரகாசம், உதவி பொறியாளா் அசோக், தக்கோலம் பேருராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு, பேரூராட்சி துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன், திமுக ஒன்றிய செயலா்கள் ஆா்.தமிழ்செல்வன், எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இப்பாலத்தின் நீளம் 125.06 மீட்டா், ஓடுதள அகலம் 10.5 மீட்டா் மற்றும் இருபக்கமும் தடுப்புச் சுவா்களுடன் அமைக்கப்படவுள்ள இந்தப் பால பணிகளை குறிப்பிட்ட பணிக்காலமான 15 மாதத்துக்குள் அடுத்த பருவமழை காலத்துக்கு முன்னதாகவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என பணி ஒப்பந்ததாரருக்கு அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தினாா்.

