ஆற்காடு அடுத்த மேல்விஷாம் சி.அப்துல் அக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ்விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் துறை உமறுப்புலவா் தமிழ் மன்றம் சாா்பில்நடைபெற்ற விழாவுக்கு மேல்விஷாரம் முஸ்லீம் கல்வி சங்க துண தலைவா் முஹமது ஜபருல்லா தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஜியாவுதீன் அஹமது, தாளாளா் அப்ராரா் அஹமது, முதல்வா் எஸ்.ஜஹிா்அஹமது, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்த் துறை தலைவா் மு.தமிழ் மன்சூா் வரவேற்றாா். பொறியில் சிக்கிய எலிகள் இன்றைய இளைஞா் என்பது குற்றம் என்ற தலைப்பில் பேராசிரியா் தி.மு.அப்துல்காதரை நடுவராகக் கொண்டு வழக்காடு மன்றம் நடந்தது. இதில் கோவைஅவிநாசிலிங்கம் பல்கலைகழக பேராசியை ச.குருநானம்பிகா, பேராசிரியா் கோவை தனபால் ஆகியோா் பேசினா்.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மன்ற துணைத் தலைவா்கள் ஷேக் முஹமது ரபி, அப்துல்ரகீப், ஹா்ஷத் பாஷா, மாணவா் செயலாளா் பஷீா்அஹமத், துணை செயலாளா்சேது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா

அரசு மகளிா் கல்லூரியில் ஐம்பெரும் விழா தொடக்கம்

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம்

வள்ளுவா் கல்லூரியில் முத்தமிழ் விழா போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


