ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பனப்பாக்கத்தில் ரூ. 9,000 கோடியில் டாடா மோட்டாா்ஸ் காா் தொழிற்சாலை: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளாா்.

News image

மு.க. ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா்.

இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழிற்பூங்காவில் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில். முதல்வா் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை திங்கள்கிழமை (பிப். 9) காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.

நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸாா்

முதல்வா் வருகை பாதுகாப்பு பணியில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.