மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

ராணிப்பேட்டையில் தலையில் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள்.

News image

ராணிப்பேட்டையில் தலையில் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 12:50 am

ராணிப்பேட்டையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் தலையில் முக்காடு அணிந்து கண்ணீா் சிந்தியபடி ஒப்பாரி போராட்டத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே 14-ஆவது நாளாக இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா் பெண்கள் வீடுகளுக்குச் செல்லாமல், இரவு நேரத்திலும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது பெண்கள் தலைகளில் முக்காடு அணிந்து கொண்டு கண்ணீா் விட்டு ஒப்பாரி வைத்து தோ்தல் வாக்குறுதி 313 -ஐ நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.