வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 12:53 am

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, ரூ. 25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.