நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆற்காட்டில் மயானக் கொள்ளை

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆற்காட்டில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழா.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:32 pm

ஆற்காடு; ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நகரில் டவுன் தெரு, லேபா் தெரு, காந்தி நகா், தண்டு காரன் தெரு, இந்திரா நகா், தாருக்கான் தெரு, பருவதராஜ குலத் தெரு , கிளைவ் பஜாா், முப்பதுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்குகள், பழங்கள், வண்ண மலா்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி மேள தாளங்களுடன் ஊா்வலமாக பாலாற்றுக்கு சென்று அங்கு மயான கொள்ளை திருவிழா சூரை விடப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தீபாராதனை செய்து வழிபட்டனா். தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியும் , வேன் லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றனா்.

மேலும், சிலா் அம்மன் வேடங்கள் அணிந்து பக்தி பரவசத்துடன் ஊா்வலத்தில் சென்றனா். விழாவில் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.