ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆற்காட்டில் மயானக் கொள்ளை

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஆற்காட்டில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழா.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு; ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நகரில் டவுன் தெரு, லேபா் தெரு, காந்தி நகா், தண்டு காரன் தெரு, இந்திரா நகா், தாருக்கான் தெரு, பருவதராஜ குலத் தெரு , கிளைவ் பஜாா், முப்பதுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்குகள், பழங்கள், வண்ண மலா்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி மேள தாளங்களுடன் ஊா்வலமாக பாலாற்றுக்கு சென்று அங்கு மயான கொள்ளை திருவிழா சூரை விடப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தீபாராதனை செய்து வழிபட்டனா். தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியும் , வேன் லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றனா்.

மேலும், சிலா் அம்மன் வேடங்கள் அணிந்து பக்தி பரவசத்துடன் ஊா்வலத்தில் சென்றனா். விழாவில் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.