மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராணிப்பேட்டை ஒருங்ணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ - மெயில் மூலம் திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து

News image
ராணிப்பேட்டை ஒருங்ணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதணையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஒருங்ணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ - மெயில் மூலம் திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

டது.

ஏற்கெனவே கடந்த ஜன. 6-ஆம் தேதி ராணிப்பேட்டையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸாா், வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதணையில் ஈடுபட்டனா்.

வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் நீதிமன்ற வளாக்ததில் தினசரி வழக்காடிகள்,வழக்குரைஞா்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது.

காலை 11.30 மணியளவில் மா்ம நபா் மூலமாக குறுஞ்செய்தி வந்தது. அதில், நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், எப்போது வேண்டும் என்றாலும் வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்ற ஊழியா்கள் இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவத்தனா். தகவல் அறிந்து ராணிப்பேட்டை போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் வரவைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து, சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லையென உறுதியானது. இ-மெயிலில் வந்த குறுஞ்செய்தி போலியானது எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸாா் விசராணை நடத்தி வருகின்றனா்.