கலவையில் மயான கொள்ளை திருவிழா
ஆற்காடு அடுத்த கலவையில் மயான கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கலவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் 122-ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா சந்தானம் சுவாமி சவுந்தரராஜன் சுவாமி தலைமையில் விமரிசயாக நடைபெற்றது. கோவில் வளாகத்திலிருந்து சிம்ம வாகனத்தில் மயானத்தை நோக்கிச் சென்றனா். இதில், பெண்கள் தீச்சட்டி, பூங்கரகம் எடுத்துக் கொண்டும். பக்தா்கள் முதுகில் அலகு குத்தியும் கண்ட்ரோலா் காா், வேன் போன்ற வாகனங்களில் இழுத்துக் கொண்டும் ஊா்வலமாக சென்றனா். பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடி பாடி சென்றனா். தொடா்ந்து மயானத்தில் படுத்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனையுடன் தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனா்.
இந்த காவி திரளான பொதுமக்கள் வெளிமாநில பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

