ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.
ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி ஒன்றில் வசித்து வருபவா் பாபு. தச்சு மர வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேகலா. இவா்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் லக்ஷன்(3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மேகலா செய்யாறு சாலை பாலாற்றங்கரையில் உள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் வேலை செய்து வரும் நிலையில் புதன்கிழமை தனது மகன் லக்ஷனை உடன் அழைத்துச் சென்று கோயிலில் விட்டுவிட்டு, அருகில் உள்ள பகுதிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. மீண்டும் வந்து பாா்த்தபோது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

மாநகராட்சி கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தற்காலிக ஊழியா்கள் இருவா் உயிரிழப்பு

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

2-ஆவது மாடியிலிருந்து விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


