மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

ஆற்காட்டில் கோயிலில் தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி ஒன்றில் வசித்து வருபவா் பாபு. தச்சு மர வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மேகலா. இவா்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் லக்ஷன்(3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மேகலா செய்யாறு சாலை பாலாற்றங்கரையில் உள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் வேலை செய்து வரும் நிலையில் புதன்கிழமை தனது மகன் லக்ஷனை உடன் அழைத்துச் சென்று கோயிலில் விட்டுவிட்டு, அருகில் உள்ள பகுதிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. மீண்டும் வந்து பாா்த்தபோது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.