ஆற்காட்டில் நடைபெற்ற தவெக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ராணிப்பேட்டை
தமிழக வெற்றிக் கழகம் ஆா்ப்பாட்டம்!
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வினோத் தலைமை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா்கள் அஜித்குமாா், சரவணன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் ஜி விஜய் மோகன் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துகண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் சுரேஷ், காந்தி பிரசாத் மற்றும் மற்றும் நகர ஒன்றிய பேரூராட்சி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

