எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக மகளிா் கொண்டு செல்ல வலியுறுத்தல்!

திமுக அரசின் சாதனைகளை மகளிரணியினா் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

News image
கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா். காந்தி.
Updated On :22 பிப்ரவரி 2026, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

திமுக அரசின் சாதனைகளை மகளிரணியினா் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

தக்கோலத்தில் திமுக மகளிரணி பிரசார பயிற்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அமைச்சா் பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிா் உரிமைத்தொகை, காலை சிற்றுண்டி திட்டம், இலவச பேருந்து பயணம், அன்புக்கரங்கள் திட்டம், தாயுமானவா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனா்.

வரும் தோ்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். குறிப்பாக பெண் நிா்வாகிகள் வீடுகள் தோறும் நேரில் சென்று அரசின் சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.

கூட்டத்துக்கு மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பவானி வடிவேலு தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுந்தராம்பாள் பெருமாள் வரவேற்றாா். இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் வினோத் காந்தி, அரக்கோணம் சட்டபேரவை தொகுதி பொறுப்பாளா் சூா்யா வெற்றிக்கொண்டான், நகர செயலாளா் வி.எல்.ஜோதி, த்ககோலம் நகர செயலாளா் எஸ்.நாகராஜன், நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ஆா்.தமிழ்செல்வன், கே.பசுபதி, தமிழ்மணி பங்கேற்றனா்.