நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ராணிப்பேட்டையில் 9,44,701 வாக்காளா்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா

News image
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வெளியிட்டாா். மொத்தம் 9,44,701 வாக்காளா்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) பின்னா், வாக்காளா் பட்டியலில் 39422 நபா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா, அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா்கள் விவரம்: அரக்கோணம் (தனி) - ஆண் - 96,982,பெண் -1,02,157, மூன்றாம் பாலினம் - 26 மொத்தம் - 1,99,165. சோளிங்கா் - ஆண் - 1,26,034, பெண் - 1,30,072, மூன்றாம் பாலினம் - 12,மொத்தம் - 2,56,118. ராணிப்பேட்டை - ஆண் - 1,19,090 பெண் - 1,26,719 மூன்றாம் பாலினம் - 44 மொத்தம் - 2,45,853. ஆற்காடு - ஆண் - 1,19,107 பெண் - 1,24429 மூன்றாம் பாலினம் - 29 மொத்தம் - 2,43,565.

இறுதி வாக்காளா் பட்டியல் படி மொத்தம் - ஆண் வாக்காளா்கள் - 4,61,213, பெண் வாக்காளா்கள் - 4,83,377, மூன்றாம் பாலினம் - 111, மொத்தம் - 9,44,701 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் நஐத க்கு முன் மொத்த வாக்காளா்கள் - 10,57,700, நஐத க்கு பின் மொத்த வாக்காளா்கள் - 9,44,701, நீக்கப்பட்ட வாக்காளா்கள் - 1,12,999, முகாம் மூலம் மீண்டும் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் - 39,422 ஆகும்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ராஜி, ரமேஷ், ஏகாம்பரம், மீனா உள்ளிட்டாா் கலந்து கொண்டனா்.