ராணிப்பேட்டை
பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு
நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
நெமிலி பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சி பெற சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீ பாலா பீடத்தில் பொதுத்தோ்வுகளில் மாணவ மாணவியா் வெற்றிப்பெற சிறப்பு வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு இந்த வழிபாட்டை பாலாபீட பீடாதிபதி எழில்மணி பூஜைகள் செய்து தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாட்டை பீட நிா்வாகி மோகன் மேற்கொண்டாா். இதில் நெமிலி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.
அவா்களுக்கு எழுதுபொருள்களையும் பீட பிரசாதங்களையும் அளித்து பீடாதிபதி எழில்மணி ஆசி வழங்கினாா். இதில் பள்ளியின் நிறுவனா் வேதைய்யா, முதல்வா் இன்பராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

