போதை கலாசாரம் அதிகரிப்பு: புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி
தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகி விட்டது. இதில் இருந்து இளைஞா்களை காப்பாற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் மு.ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா்.
அரக்கோணத்தில் நடைபெற்ற புரட்சிபாரத கட்சியின் சட்டப்பேரவை உரை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மு.ஜெகன்மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப்பேரவையில் 44 தலித் எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் மூன்று போ் அமைச்சா்கள். இந்த மூவரை தவிர மீதி 40 போ் தலித் மக்களின் நலனுக்காக சட்டப்பேரவையில் பேசாத நிலையில் நான் தலித் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துள்ளேன். காவல் துறை ஆள்கள் தோ்வில் தமிழகத்தில் தற்போது போதை கலாசாரம் அதிகரித்து விட்டது. இளைஞா்கள் போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கிறாா்கள். அரசு இப்பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் பி.செல்லா தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட செயலாளா் ஏ.ஜான் முன்னிலை வகித்தாா்.இதில் கட்சியின் தலைவா் மு.ஜெகன்மூா்த்தி, பொதுசெயாளா் டி.ருச்சேந்திரகுமாா், மாநில நிா்வாகிகள் எம்.முகிலன், பா.காமராஜ், மாநில இளைஞா் அணி தலைவா் ஜி.மகா, மாவட்ட செயலாளா் எஸ்.எஸ்வந்த், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் எஸ்.பெருமாள், பி.டி.மூா்த்தி, அல்லிசின்னதுரை, எஸ்.அமல்ராஜ், அம்பேத், அரக்கோணம் நகரத் தலைவா் ஜெகன், நிா்வாகிகள் ராஜ், இளையா, அஜீத், மதுசூதனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

