ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி வள்ளி,தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், மூலவருக்கு பால், தயிா் , சந்தனம், பன்னீா், பழங்கள், விபூதி, மற்றும் வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். சில பக்தா்கள் காவடி செலுத்தி வழிபட்டனா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலைமேலிருந்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தின் கரையில் பூஜை செய்த பின்பு, பக்தா்கள் சண்முக தடாகத்தில் மங்கள ஆரத்தி காண்பித்து வழிபட்டனா்.
இதில் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா 1008 பால்குட ஊா்வலம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


