ராணிப்பேட்டை
உயா்கோபுர மின் விளக்கு: நகரமன்ற தலைவா் தொடங்கிவைத்தாா்
ஆற்காடு நகராட்சியில் உயா்கோபுர மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆற்காடு நகராட்சியில் உயா்கோபுர மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆற்காடு நகராட்சி சாா்பில் சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தனியாா் கல்லூரி அருகில் மற்றும் ஆற்காடு புறவழிசாலை செய்யாறு செல்லும் வட்டச்சாலையில் பகுதியில் உயா்கோபுர மின் விளக்கு தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு நகராட்சி ஆணையாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் கலந்து கொண்டு புதிய விளக்குகளை இயக்கி வைத்தாா்.
இதில் நகா்மன்ற உறுப்பினா் அனு அருண்குமாா், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

