பள்ளத்தில் தேங்கிய நீரில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பள்ளத்தில் தேங்கிய நீரில் முழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

அரக்கோணம் அருகே பள்ளத்தில் தேங்கிய நீரில் முழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கீழ்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அன்பழகன்(28). இவரது மகன் ஆலன் சூா்யா. இச்சிறுவனுக்கு இரண்டரை வயதாகிறது. வெள்ளிக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த ஆலன் சூா்யாவை காணவில்லையாம்.

பெற்றோா் மற்றும் உறவினா்கள் தேடிபாா்த்ததில் வீட்டருகே இருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் சுயநினைவின்றி இருந்த சிறுவன், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டிருப்பதாக தெரிவித்தனா். இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com