ராணிப்பேட்டை: தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில், மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீா்வு பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
தோ்தல் பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை கூறியது:
அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 4,61,213 ஆண் வாக்காளா்களும், 4,83,377 பெண் வாக்காளா்களும், 111 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 9,44,701 வாக்காளா்கள் உள்ளனா்.
1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,247 வாக்குச்சாவடி அலுவலா்கள், 127 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடா்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அனைத்துதுறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
12 பறக்கும் படை குழுக்கள:
மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒரு சட்டப் பேரவைச் தொகுதிக்கு 3 பறக்கும்படை குழுக்கள் என 4 தொகுதிகளுக்கு 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் மேற்படி பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை கட்டுப்பாட்டு அறையில் 1800-425-7006 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04172-241002 241004, 241005, 241006 என்ற எண்களிலும், இ-ஸ்ண்ஞ்ண்ப் செயலியின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- க்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.
மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை திரும்பபெற உரிய ஆதாரங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீா்வு பெறலாம் என்றாா்.
இதில், எஸ்.பி. பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் பூமா (தோ்தல்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

மாவட்ட வாக்கு எண்ணும் மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை தோ்தல் அலுவலா் உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


