இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ராணிப்பேட்டை: 51 இடங்களில் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் - எஸ்.பி. இயக்கி வைத்தாா்

News image
Updated On :19 மே 2026, 1:27 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 51 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியை எஸ்.பி பே.சிபின் தொடங்கி வைத்தாா்.

சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அபாய இடங்கள் ) அடையாளம் காணப்பட்டு, சூரிய சக்தியில் இயங்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விபத்து தடுப்பு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் முன்முயற்சியாக விபத்து ஏற்படும் முக்கிய சந்திப்புகளில் சோலாா் ஸ்டட்கள் பிரகாசமான பிரதிபலிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து சிக்னல்கள், எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் பேரிகேடுகள், பிரதிபலிப்பான்கள் அபாயப் பகுதிகள் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதன் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் நடக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 51 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியை எஸ்பி பே.சிபின் தொடங்கி வைத்தாா்.

இந்த தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியால் பெருமளவு விபத்துகள் குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் தடுத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சாலைப்பயணம் அமையும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளா் கனகராஜ், தொழில்நுட்ப ஆய்வாளா் சரவணனன்,ராணிப்பேட்டை காவல் ஆய்வாளா் சுந்தரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image