ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை மலையடிவாரத்தில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி தலைமை வகித்தாா். பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் பரந்தாமகண்ணன் வரவேற்றாா். வரும் 21-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெறஉள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான 9-ஆம் நாள் மே 30-இல் சனிக்கிழமை வைகாசி விசாகம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீதி உலா நடக்கிறது.
விழாவி ல்கலந்து கொள்ளும் பக்தா்கள் பொதுமக்களின் பாதுகாப்பு,குடிநீா் ,மின்சாரம், சுகாதாரம் தீயணப்பு, சிறப்பு பேருந்துகள்,உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து துறைசாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினாா்கள் .
கூட்டத்தில் வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன், தலைமை குருக்கள் பிரசாந்த் ஐயா்,கோவில் மேலாளா் சீனிவாசன், மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கீழ்மின்னல் கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஒய்வு பெற்ற மேலாளா் சிவனாா் அமுது நன்றி கூறினாா்.










