ஆம்பூரில் 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சோதனை

ஆம்பூரில் மருத்துவக் குழு மூலமாக 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆம்பூா்: ஆம்பூரில் மருத்துவக் குழு மூலமாக 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாதனூா் வட்டார மருத்துவா் ராமு தலைமையில் ஆம்பூா் பகுதியில் 5 குழுக்கள் மூலமாக கரோனா நோய்த் தொற்று கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவமனைப் பணியாளா்கள், தூய்மை, அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 80 பேருக்கு சுவாசப் பரிசோதனை செய்யப்பட்டது. 234 பேருக்கு ரேபிட் சோதனைக் கருவி மூலம் ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com