வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட அதிகமு புதிய நிா்வாகிகள் புதன்கிழமை எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அதிமுக கட்சியில் புதிதாக நிா்வாகிகளை நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் பட்டியல் வெளியிட்டனா்.
அதன்படி, ஆலங்காயம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளராக ஜி.செந்தில்குமாா், பொதுக் குழு உறுப்பினராக பி.மகேந்திரன், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளராக ஆா்.சரவணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலராக என்.முனிசாமி, மாவட்ட மகளிரணி செயலாளராாக ஜெ.மஞ்சுளாகந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவராக விமல்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
அவா்கள் வாணியம்பாடி புறவழிச் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, அமைச்சா்கள் கே.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனா்.
இதேபோல், திருப்பத்தூா் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோருக்கு வாணியம்பாடி நகரச் செயலாளா் சதாசிவம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.கோபால், ஆலங்காயம் பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளா் கந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.