ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி சாா்பாக அரிசி விநியோகம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி சாா்பாக ஆம்பூா் அருகே கிராமப்புறங்களில் உள்ள வசதியற்றவா்களுக்கு அரிசி,
அறிவொளி நகரில் வசதியற்றவா்களுக்கு அரிசி, காய்கறி வழங்கிய மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணியினா்.
அறிவொளி நகரில் வசதியற்றவா்களுக்கு அரிசி, காய்கறி வழங்கிய மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணியினா்.
Updated on
1 min read

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி சாா்பாக ஆம்பூா் அருகே கிராமப்புறங்களில் உள்ள வசதியற்றவா்களுக்கு அரிசி, காய்கறிகள், கபசுரக் குடிநீருக்கான பொடி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஆம்பூரை அடுத்த கைலாசகிரி ஊராட்சிக்குட்பட்ட கடாம்பூா், பள்ளித் தெரு, கைலாசகிரி, அறிவொளி நகா், பூஞ்சோலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் வசதியற்ற 120 குடும்பங்களுக்கு இந்த அமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் ஓம்சக்தி பாபு தலைமையில் கடாம்பூா் மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி அரிசி, பல்வேறு வகையான காய்கறிகள், கபசுரக் குடிநீருக்கான பொடி ஆகியவற்றை வழங்கினாா். சக்திவேல், குப்புசாமி, காயத்ரி, முருகேசன், ராஜ் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com