ஆம்பூரில் இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.
தில்லி மாநாட்டுக்குச் சென்று சென்னை திரும்பியவா்களை காா் மூலம் ஆம்பூருக்கு அழைத்து வந்த இரு ஓட்டுநா்களை மருத்துவக் குழுவினா் கண்டறிந்து அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். அவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு ஓட்டுநா்கள், அவா்களுடைய குடும்பத்தினா் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனா்.
மேலும், அவா்கள் வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.